Kamalambika sametha Vanmeeganadhar – Thyagarajar Swamy Kovil, Thiruvarur
Location :
Called as Thiruvarur, Aaroor etc . This temple is situated on the banks of the river Odam poekki. Can be reached from all major towns in Thanjavoor district and from places like Trichy , Chennai etc . From Thanjavoor and Kumbakonam a lot of buses are available . A big town situated on Nagappattinam – Kudalur highway .
Everyone knows the temple by name Thiyaagaraaja swaamy temple.
Sthala puranam: (Detailed Sthala puranam is available in Tamil below)
Tiruvarur – known as Arur in historical and bhakti literature – is best known for the Thyagarajar temple and the Ther (temple chariot). Siva is popularly known as Thyagarajar here, which is the name given to the Somaskandar (sa-uma-skanda) manifestation of Siva together with Uma (Parvati) and Skanda (Murugan). In most Siva temples, the shrine for Thyagarajar or Somaskandar is located adjacent to the garbhagriham, to its right. Vishnu is said to have worshipped Somaskandar, which is the reason for the importance given to this manifestation of Siva.
The main deity of the temple is named Vanmeekanathar, because Siva appeared as an ant-hill (vanmeekam) in response to the prayers of the gods. Siva, as Thyagarajar, is regarded as the king of the gods.
Tiruvarur is regarded as one of the holiest – if not the holiest – of Siva temples. The last puja of the day – Ardhajama Puja – takes place before each temple closes, and the one at Tiruvarur is the last among all temples in Tamil Nadu, and it is believed that Indra himself performs the puja every day. This is also one of the Bootha Sthalams – representing earth – in addition to Kanchipuram Ekambareswarar temple.
Vidanga Sthalam
Lakshmi is said to have performed penance and worshipped Siva at Tiruvarur, in order to be able to wed Vishnu. As a result, the temple tank – Kamalalayam – is named after Her, and has a separate shrine for Naganathar in the middle. This can be reached by boat every day around 5 pm. There are 64 bathing spots / ghats on the perimeter of the tank, and bathing at each of these is said to give specific benefits.
Siva here is worshipped as the Veedhi Vitangar, and is said to perform the Ajapa Natanam here. There is a story to this. According to one puranam, Vishnu was cursed by his sister Parvati, for not honouring her. So He created and worshipped a murti of Somaskandar, and was able to be rid of the curse. For His worship, He kept the murti on his chest and named it Thyagarajar. The murti bobbed up and down in rhythm with Vishnu’s breathing, which is said to be represented by the Ajapa Natanam. The Vitangar abhishekam takes place twice a day – once at 8.30 am and once around 5.30 or 6 pm. Tiruvarur is also closely connected with the story of Muchukunda Chakravarti and the Maragatha Lingam. Because the moolavar Lingam is made of sand and mud, it does not receive abhishekam. Instead, the Maragatha Lingam is given the abhishekam. Interestingly, while the Maragatha Lingam rarely leaves the temple, on the limited occasions it does, it is not taken out through the eastern entrance, because it is believed that Indra is waiting there even today, to take it back to his world!
கமலாம்பிகா சமேத வன்மீகநாதர் – தியாகராஜ ஸ்வாமி கோவில், திருவாரூர்
தலபுராணம் :
எல்லாத் திருத்தலங்களிலும் சிவபெருமானின் முன்பு நந்தி அமர்ந்திருப்பார். ஆனால், தியாகேசப்பெருமானின் முன்பு இருக்கும் நந்தி எழுந்து நின்றவண்ணமாகக் காட்சி தருகிறார். இதற்கு சொல்லப்படும் காரணம் பொருத்தமாகவே இருக்கிறது.
சுந்தரருக்காகத் தூது சென்ற பெருமான் அவசரத்தில் நந்திமேல் அமர்ந்து செல்லாமல் திருவீதிகளில் நடந்தே சென்றார். இனி, பெருமானை நடக்கவிடக்கூடாது அவர் புறப்பட்டால் தாமும் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கவேண்டும் என்பதால் எழுந்து நின்ற வண்ணமாக இருக்கிறது.
வடமொழி தமிழ் மராட்டி ஆகிய மொழிகளில் இத்தலத்திற்குப் பல புராணக் கதைகள் உள்ளன. வன்மீகநாதர், தியாகராஜர் ஆகிய இரண்டு மூர்த்திகள் பற்றிய தலபுராணக் கதைகள் பின்வருமாறு உள்ளன.
வன்மிகநாதரைப் பற்றிய வரலாறுகள்:
முற்காலத்தில் திருமால், இந்திரன் முதலிய தேவர்கள் ஒருங்குகூடி ஒரு யாகம் செய்ய எண்ணினர். குருக்ஷேத்திரமே தக்க இடம் என்று துணிந்தனர். இந்த யாகத்தை இறுதிவரையில் இளைக்காமல் இயற்றுபவரே எல்லாரிலும் உயர்ந்தவரென்று சபதம் செய்தனர். அவ் யாகத்தில் இந்திரன் முதலியோர் தோற்றனர். விஷ்ணு வென்றார்: செருக்குற்றார். அதை அடக்க முன்னவன் அருளால் ஓமகுண்டத்தில் ஒரு வில் உண்டாயிற்று. அதனை எடுத்து வளைத்துக்கொண்டு தேவர்கள் எல்லோரையுமே அடக்கியாள எண்ணி அவர்களைத் துரத்திச் சென்றார். பராசத்திபுரம் என்னும் இத்தலத்தை அடைந்தார். இறைவி திருவருளால் அவர் வலியெலாம் ஒடுங்கியது. வில்லைத் தரையிலூன்றி அதன் மேல் தன் தலையைச் சாய்த்து அயர்ந்து கிழ அறிவு சோர்ந்தார். சமயம் நோக்கிய தேவர்கள் தமது குருவாகிய வியாழனை ஆலோசனை கேட்டனர். அவர் உத்தரவுப்படி தேவர்கள் யாவரும் வில்லின் கீழ்ச் செல்லுருவமாகிப் புற்றில் அமர்ந்து நாணை அரித்து அறுத்தனர். அப்போது வில் நிமிர விஷ்ணுவின் தலை தெறித்தது. தேவர்கள் அஞ்சினர். ஆடகேசத் திருநாமத்தோடு பாதாளத்து எழுந்தருளிய பரமன் புற்றிடங்கொண்டு சிவலிங்கமாகக் காட்சி தந்தார். இந்திரனும், பிரமனும் வணங்கித் தோத்திரம் செய்தனர். இறைவன் சிவலிங்கத் திருமேனியிலிருந்து வெளிப்படத் தேவர்கள் வழிபட்டனர். அபயம் வேண்டினர். இறைவனும் செருக்குக்கொண்ட திருமால் தலையை
உடலோடு பொருத்துங்கள் என்ன அவ்வாறே செய்து, அத்திருமாலையும் பெற்ற பின்னர்த் திருமால் முதலிய தேவர்கள் ஆகம முறைப்படி வழிபாடு செய்து எல்லா இன்பங்களையும் எய்தினார் என்று கூறப்படுகின்றது.
மற்றும், திருமகள் கடலரசனாகிய வருணனிடத்து வளர்ந்து வந்தான். திருமால் மதுகைடபர் என்ற அகரர்களை வென்ற வரலாற்றைக் கேட்டு அவரையே மணந்துகொள்ளவேண்டும் என்று இத்தலம் அடைந்து திருஷ்வட்டானே சுவரரை வழிபட்டுத் தவம் செய்து வந்தனள். இறைவன் காட்சி தந்து அவ்வாறே வரமீந்தனர். திருமகள் என் பெயரால் இந்நகரம் வழங்கவேண்டும் என்ற வரமும் கேட்டனன். அது முதல் இத்தலம் கமலாலயம் என்று அழைக்கபெறுகிறது. ஒரு காலத்தில் முனிவர்கள் வந்து தரிசித்தபொழுது வன்மீகநாதர் கோடியளவான திருவுருவங்களைக் கொண்டு காட்சியளித்தனர். முனிவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி வழிபாடாற்றினர்: சிவப்பேறெய்தினர்.
திலீபன் மகளாகிய அசன் என்னும் அரசன் நால்வகைச் சேனையுமின்றி அரசாளும் முறை என்ன என்று தன் குல குருவாகிய வசிட்டனை வினவினான். அதற்கு அவர் ‘திருவாரூர் சென்று வன்மீகநாதரை வழிபட்டு அவரருளால் துர்க்கையை நிலைபெறுவித்து வழிபாடு செய்யின் முடியும்’ என்று கூறினர். அசன் அவ்வாறே செய்தான்.
அசன் மகனாகிய தசரதன் ஆட்சிக்காலத்தில் உரோகிணி நட்சத்திரத்தை ஊடறுத்துச் சனி செல்வதைச் சோதிடர் மூலமாக அறிந்து, சனியைத் தடுக்கவெனச் சளி மண்டலத்தை அடைந்தான். சனியைக் கண்டு, ” தேவரீர் உரோகிணியை ஊடறுத்தால் உலகம் பஞ்சம் எய்தும்; ஆதலால், நூற்றுநான்கு யுகம் வரையும் உரோகிணியை ஊடறுத்தல் ஆகாது; என் வார்த்தையை மீறின் என்வாளுக்கு இரையாவீர்” என்றார். சனி அரசன் துணிவைக் கண்டு மெச்சிக் கருணைகூர்ந்து அவன் வேண்டிய வரத்தையும் மற்றும் பல வரங்களையும் கொடுத்தான்.
இதனையறிந்த இந்திரன் தசரதன் நட்பைப் பெற வேண்டித் தன் உலகிற்கு அழைத்து விருந்தியற்றி உனக்கு ஏதாவது குறையுளதோ என்றான். ‘ என்னரசாட்சி இனிமையாய்ச் செல்லுகின்றது; ஆனால், பிள்ளையில்லாக்குறை பெரிதாயிருக்கின்றது. என்றான். ‘அப்படியாயின் கமலாலயம் சென்று வன்மீகநாதரை வழிபட்டால் நீ எண்ணியது எய்துவாய் என்ன, தசரதன் அவ்வாறே வந்து வழிபட்டு இறைவன் அருள்பெற்றுச் சென்ற யாகஞ் செய்து இராமன் முதலிய நால்வரையும் பெற்று இன்பம் எய்தினான்.
அவ்வாறே சித்தீசன் என்னும் அரசனும் புத்திரப்பேறு எய்தினான். குலிசேசன் என்னும் அரசன் பாரணைப் புண்ணிய காலத்தில் துருவாச முனிவருக்கு ஊன் கலந்த சோற்றையிட்டான். துருவாசர் சபித்தார். அச்சாபத்தை இத்தலத்து வன்மீகநாதரை வழிபட்டுப் போக்கியுய்ந்தான். அவ்வாறே மன்மதன், மேனகை முதலியவர்களும் வழிபட்டுச் சாபம் நீங்கினர். பசுவைத் தேடிக்கொண்டு வணிகள் ஒருவன் வன்மீகரை வலம்வர அதனால், மறுமையில் மன்னனாயினான், இராமன், குசன், லவன், சமற்காரன் என்னும் அரசன், கோகருணர் என்னும் முனிவரொருவர், கேமசருமன் முதலியவர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர்.
தியாகேசர் வரலாறு :
திருமால் தனக்கு ஒரு அழகிய மகன் வேண்டுமென்று விரும்பினார் .குறையெல்லாம் நிறைவிக்கும் பெருமானிடம் வேண்டிக் கடுந்தவம் மேற்கொண்டார்.வெயிலிலும், மழையிலும் பெரிய நீலமலை போல அசையாது நின்று கடுத்தவஞ் செய்தனர். அதன் பயனாக இறைவன் திருவருட்சத்தியோடு வெளிப்பட்டனர். கண்ட திருமால் துண்ணெனத் திடுக்கிட்டு “இறைவா வேண்டுவோர்க்கு வேண்டுவதே யீயும் விண்ணவர் தலைவ! அடியேனும் தேவரீர் திருவருளால் உலகப் பாதுகாப்பு முதலிய எல்லா நன்மைகளையும் எய்தினேன் ; ஆயினும் பிள்ளையில்லாக் குறை பெரிதாயிற்று. அதனைத் தீர்க்க அழகிய புத்திர பாக்கியத்தை அருளுதல் வேண்டும்” என்றனர். பெருமானும் பேரருள் கூர்ந்தார் ; ஆனால், திருமால் இடப்பக்கத்து இருக்கின்ற உமாதேவியை வணங்கவில்லை. அதனால் உமாதேவியார் சிறிது சினங்கொண்டு இறைவன் திருவருளால் நீ புத்திரனை யெய்தினும் அவன் வீதிவலியால் வலிய அழிக’ என்று சாபங்கொடுத்துப் பின்பு பெருமானையும் அழைத்துக்கொண்டு விரைந்து மறைந்தருளினார்”.
திருமால் கவன்று, செய்வது இன்னதென்று அறியாது நிற்கையில் திருவருள் உண்ணின்று உணர்த்த ஒரு எண்ணம் உண்டாயிற்று. அவ்வெண்ணப்படியே சிவபெருமானையும், உமா தேவியாரையும், குமாரக் கடவுளையும் ஒரே ஆசனத்தில் எழுந்தருளுவித்து ஆகம விதிப்படி அரிய பூசனை செய்துவந்தனர். பூசனைக்குகந்த பெருங்கூத்தர் விடையின்மேல் அருள் உருக்கொண்டு வெளிப்பட்டுக் காட்சியளித்தனர். திருமால் கந்தனையும், அம்மையையும், அப்பனையும் முறையே வணங்கினர். மகிழ்ந்த மஹேஸ்வரி, என் சாபம் தடைபடாது; ஆனால் நின்மகன் இறைவன் நெருப்புக் கண்ணால் வெந்து பின் பிழைப்பான் என்று சாபவிடை தந்தனள், மகிழ்ந்த திருமால், ‘ இதே சோமாஸ்கந்தத் திருக்கோலத்தோடு தேவரீர் எப்பொழுதும் எழுந்தருளி இன்னருள் புரிதல் வேண்டும் ; இந்த உலகம் முழுதும் உய்தல் வேண்டும்’ என்று வேண்டினர் அவ்வாறே இறைவர் அருள் பாலித்தனர். பின்பு திருமால் தன் நெஞ்சக் கோயிலில் அம்மூர்த்தியை நிறுவி வழிபாடாற்றி வந்தனர். திருமாலின் நெஞ்சகத்து எழுந்தருளி உச்சுவாத நிச்சுவாசித்தால் (மூச்சுக்காற்றை உள்ளிழுத்தலும் வெளி விடுதலும்) ஆகிய அசைவால் பெருமானும் அசைந்தாடி ஆனந்தங்கொண்டு திருமாலுக்குத் திருவருள் சுரந்து விளங்கினார். இந்த நடனம் “அஜபா நடனம்” எனப்படும்.
அப்போது தேவலோகத்தை அசுரர்கள் சூழ்ந்து வருத்தத் தொடங்கினர்; கொள்ளையடித்தனர் ; கொடுமை புரிந்தனர். இந்திரன், திருமாலைக் காணப் பாற்கடலை அடைந்து அவரிடம் நிகழ்ந்த யாவையுங் கூறினான். இந்தப் பெரிய துன்பம் எப்போது கழியுமோ? என் செய்வேன் ! என்று ஏங்கினான். இரங்கிய திருமால் ‘ என் உயிருக்குயிராக இருக்கின்ற ஒரு பரம்பொருளைத் தருகின்றேன். அதனை நீயும் வைத்து அன்பு குறையாது பூசனை செய்து வந்தால், பெருமானருளால் வெற்றி கிடைக்கும்’ என்றருளிச்செய்து, சோமாஸ்கந்த மூர்த்தியாகிய இறைவனையும் ஈந்தனர். பெற்றுக்கொண்ட இந்திரன் வழிபாடு செய்து அவுணர்வாரை அகலப்பெற்றான். அளப்பிலா மகிழ்ச்சியால் சோமாஸ்கந்த மூர்த்தியையும் வழிபட்டு வந்தனன்.
அப்போது திருவாரூர் செய்த பெருந்தவத்தால் மீண்டும் வலன் என்னும் அசுரன் ஒருவன் வானுலகில் படையெடுத்து வந்து இந்திரனோடு போர் செய்து தோற்றோடச் செய்தனன்.
இது இங்ஙனமிருக்க, பூமியில் நீர்வளம் செறிந்த சோழ நாட்டின் தலைநகரமாகிய திருவாரூரில் முசுகுந்தன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவன் முற்பிறவியில் ஒரு குரங்காகத் திருக்கைலாயத்திலுள்ள பூஞ்சோலையில் சுற்றித் திரிந்தவன் இறைவனும் இறைவியும் எழுந்தருளியுள்ளபோது அவர்கள்மேல் வீழும் வண்ணம் வில்வத்தளிரைச் சிந்திவந்தான். அருட்கடலாகிய இறைவன் அறியாது செய்த நற்செயலுக்கும் மகிழ்ந்து மறுபிறப்பில் அரசனாக உலகாளச் செய்தனர். அவனே சோழ அரசனாகிய முசுகுந்தனாக அவதரித்தவன். இம் முசுகுந்தன் இந்திரனுக்கு நட்பினன். திருவருள் கூட்டுதலால் இந்திரன் நம் துணைவனாகிய முசுகுந்தனை அழைத்துவரின் நம் பகை நீங்கும்; வெற்றி இட்டும் என்றெண்ணினன். தூதனையனுக்கி அழைத்துவர செய்து துணை வலியாலும் பெருமான் திருவருள் வலியாலும் வெற்றிபெற்றளன். மகிழ்ந்த இந்திரன், முசுகுந்தனை பூலோகத்திற்கு அனுப்பும் போது வேண்டிய வரிசைகள் வழங்கி மண்ணுலக மன்ன !இவ்வுலக வாழ்வு எனக்கு உன்னால் நிலைத்தது ; உளக்கு யான் செய்யக்கூடிய கைம்மாறு ஒன்றும் தோன்றவில்லையே’ என்று உபசார மொழிகள் உரைத்தனன்.
விடைபெற்றுச் சென்று நீராடிப் பூசனை முற்றினன். புகழ் மாலைகளால் போற்றி நின்றனன். அப்போது முசுகுந்தனும் தனது கடன்களை முடித்துக்கொண்டு சென்று தியாகவிநோதரை, அரவக்கிண்கிணிக்காலரசரைக் கண்டு ஆனந்த பரவசனாய்த் தன்னைமறந்து சிவமேயாய்த் திளைத்து நின்றனன். அன்பு வலைப்பட தியாகப்பெருமாள் இந்திரன் அறியாதபடியும் இவன் மட்டும் காணும் வண்ணமும் காட்சியளித்தனர். முசுகுந்தனுக்கு முற்பிறவியின் எண்ணங்களும் செயல்களும் முறையே நினைவிற்கு வந்தன. இன்ப வெள்ளத்து மூழ்கினன். இறைவன் இவன் காதிற்குமட்டும் கேட்க ‘என்னைத் திருவாரூர்க்கு கொண்டுசெல் ; பூசனை செய் ‘ என்று ஆணை தந்தனர். அரசன் வழிபாடு முற்றி இந்திரனோடு அமுதருந்தியபின் விடைபெற விரும்பினன். இந்திரன் என்னிடம் வேண்டியது யாது ? அதைக் கேள், தருகிறேன்’ என்றனன். அப்படியாயின் “நீர் வழிபடும் தியாகப் பெருமானை அளித்திடுக” என்று அரசன் வேண்டினன். இந்திரன் ‘இம்மூர்த்தி என்னுடையதன்று, திருமால் வழிபட்டது; அவரது அனுமதிப்பெற்றுத் தரல் வேண்டும் என்றனன். முசுகுந்தன் திருமாலைக் கேட்டாயினும் கொடுக்க வேண்டுகிறேன். பெற்றன்றிப் போகமாட்டேனென்று வற்புறுத்திக் கூறினான். இந்திரன் அவ்வாறே பாற்கடல் சென்று திருமால் அனுமதியும் பெற்றுவந்தவனாய், ஆன்மார்த்த மூர்த்தியை அகல மனமில்லாதவனாய், அதுபோன்ற ஆறுமூர்த்திகளைச் செய்வித்து அரசனுக்குக் காட்டினாள் திருவருள் துணைசெய்ய முசுகுந்தன் உண்மை உருவைத் தருக எனக் காட்டிக் கேட்டனன். இந்திரன் செய்வதொன்றறியாது திகைத்துச் சிவப்பெருமூர்த்தியை அளித்தனன். முசுகுந்தன் அம்மூர்த்தியைத் திருவாரூர்க்கு எழுந்தருள் வித்தனன். வன்மீகர் திருக்கோயிலுக்குத் தென்பால் திருக்கோயில் அமைத்து அதில் அமர்த்தியருளினார் அங்ஙனம் அவன் எழுந்தருள்வித்த நாள் அத்த நக்ஷத்திரம். ஆதலால் அன்று கொடியேற்றுவித்து விழாக் கொண்டாடினான். பங்குனி உத்திரத் திருநாளில் நீர்விர ஆடிப் பா நிகழ்த்துவித்தான். முதலில் திருமால் மார்பில் அசைந்தாடிய பெருமானாக இருந்ததை ‘ பைஞ்சுடர்விடுநாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தானும் ” என்ற பகுதியால் அப்பாடிகள் அறிவிக்கின்றார்கள். அது மட்டுமா ?” தேங்காவி நாறும் திருவாரூர்த் தொன்னகரில் செங்கழு பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாதிருந்தாரே” என்ற தேவாரப் பகுதி இன்றும் கண்கண். தெய்வமாகத் தியாகர் விளங்குவதை அறிவிப்பதாகும்.
இன்னும், தியாகர் செல்வத் தியாகரான சிறப்பு ‘அடிக்காயிரம் பொன் கொடுத்தார்’ என்னும் வரலாற்றானும் பெறப்படும் ; பொன் பரப்பிய திருவீதியென ஒரு வீதிக்குப் பெயர் வழங்கியதே இதற்கு ஒரு தக்கசான்று இந்நிகழ்ச்சி உற்சவத்தில் தியாகப்பெருமான் தேருக்கு எழுந்தருளும் போது பொன் பூ, வெள்ளிப் பூ இறைப்பதாக நிகழ்ந்து வருகிறது.
‘அடிக்கோ ராயிரம்பொன் சின்னங்கள் கூற அளிப்பார்’ எனத் திருவாரூர்க் கோவையினும், ”அடி ஒன்றுக்கு உய்யும்படி பசும்பொ னோராயிர முகந்து, பெய்யந் தியாகப் பெருமானே ” எனத் திருவாரூர் உலாவினும் சிறப்பிக்கப்பெறுதல் காண்க.
சோமாசிமாற நாயனார் தான் செய்யும் யாகத்தில் இறைவனே நேரில் வந்து அவரிப்பாகம் ஏற்றருளும்படி சுந்தரரைக் கொண்டு வேண்டிக்கொண்டார் என்றும், அவ்வாறே இறைவன் உமையோடு பறையர் திருக்கோலமாக எழுந்தருளி ஏற்றுக்கொண்டார் என்றும் வரலாறு ஒன்று காணப்பெறுகின்றது. ஆனால் இவ்வரலாறு பெரிய புராணத்துக் கூறப்படவில்லை. திருக்கடவூர்த் தல புராணத்துக் கூறப்பெற்றுள்ளது. திருமாகாளத் தல புராணம் துணை நிற்கின்றது. தியாகப்பெருமான் அவ்வாறு எழுந்தருளிச் சென்றுவதற்கு அடையாளமாக ஐயடிமங்கலம், அடியக்கமங்கலம், சகடமங்கலம். பொங்குசாராயநல்லூர் என்ற ஊர்ப்பெயர்கள் சான்று பகருகின்றன.
மனுநீதிச்சோழன் நீதியைக் காக்க – பசுத்துயரம் தானடைய – தேர்காலில் மகன் வீதி விடங்கனைக் கிடத்தித் தேருருட்டியபோது தியாகப்பெருமானே விடைமீது தோன்றிக் காட்சி வழங்கி உயிர்ப்பித்தார் என்ற வரலாறு பெரிய புராணத்துக் காணப்பெறுகிறது.
நமிநந்தியடிகள் கனவில் தியாகப்பெருமான் எழுந்தருளித் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவகணமாதலைத் தெரிவித்தனர் என்பதும் பெரிய புராணத்துக் காணப்பெறுகிறது.அவ்வாறே விறன்மிண்டர், கழற்சிங்கர் வரலாறுகளும் தியாகப்பெருமானுடைய திருவருள் தொடர்புடையன.