Parimalanayagi Sametha Abathsahayeswarar Kovil, Rudhragangai
Rudhragangai village is situated approximately a kilometer from Poonthottam, a prominent stop along the Mayavaram – Thiruvarur bus route. The Poonthottam railway station is less than a kilometer away.
Rudhragangai is often associated with the panchayath koththavasal which also houses a temple and is a km away. 37 kms from kumbakonam and 20 kms from thiruvarur. Ambal and Koil Thirumagalam, both padal petra thalangal are just a couple of kms away.
One of the 70 raised bed temples built by chora king kochenganan.
A small to medium sized temple with ezquisitely carved sculptures adorn the sanctum and goshtam.
Abathsahayeswarar adorns the sanctum. behind him is a sculpture depicting Lord Shiva and Mother Parvathi in a wedded pose, with skandha positioned behind. This depiction, known as Somaskanda, is a prominent feature. The sacred Ganga is symbolically represented atop Lord Shiva’s head.
Parimala Nayagi is housed in a separate sannidhi immediately to the right upon entering the temple.
In the goshtam, one can find lingams for the 4 vedhas, saraswathi and Brahma, Lakshmi Narayanar, Varadaraja perumal and Thyagaraja.Dakshinamoorthy appears as Gnana Guru. Legend has it that Brahma and Saraswathy sought blessings from Dakshinamoorthy to alleviate a curse.
Exceptionally crafted idols of Vinayagar in a standing posture and Bhaskara Muni adorn the temple. The Sthala Vinayagar here is known as Acham Theertha Vinayagar.
Rudhra Gangai Theertham and the Arasalaru River are the theerthams of the temple. Vilvam is the sthala vruksham.
Pradoshams, Masi Magam, shivarathri are celebrated with great fervor.
Arasalaru river flows to the north and is said to be equivalent of ganga.
Parvathi did penance and asked the lord to bestow a long lived happy life ( dheerga sumangali baakyam in tamir ) here in this sthalam and got married to shiva as per legend.
This is a Shani dosham and pithru dosha parihara sthalam.
பரிமளநாயகி சமேத ஆபத்சஹாயேஸ்வரர் கோவில், ருத்ரகங்கை
விரிவான தலபுராணம் :
இத்திருத்தலம் பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான பிரமாண்ட புராணத்தில் இத்தலத்தின் மகிமைகள் விவரிக் கப்பட்டிருக்கின்றன.
இதற்கு வில்வவனம் என்று பெயர். இமவானின் மகளான கௌரி, பரமேச்வரனைக் கணவளாக அடைய இந்த வனத்துக்கு வந்து தவமியற்றினாள். அதனால். இதற்குக் கெளரிவனம் என்ற பெயரும் உண்டு. தல விருட்சம் வில்வம்.
பதஞ்சலி முனிவருக்குத் தில்லையம்பதியிலும் வியாக்கிர பாதருக்குத் திருவாரூரிலும் சிவபெருமானது அருள் கிட்டியது போல், ருத்ரகங்கையில் பாஸ்கர முனிவருக்குப் பெருமானின் பேரருள் கிட்டியதாகப் புராண வரலாறு.
தாரகாசுரனால் தேவர்கள் அல்லலுற்றபோது, பிரம்ம தேவனை அணுகிப் பரிகாரம் தேடினர்.பரமசிவனுக்கும் பார்வதிக்கும் பிறக்கப் போகும் அமரக் கடவுளால் தாரகாசுரனுக்கு அழிவு ஏற்படும் என்று அவர் கூறவே, தேவர்கள் பரமசிவனைத் தஞ்சமடைந்தனர்.
தேவர்களின் துயர் துடைக்க குமரக் கடவுள் அவதரிக்கும் பொருட்டும், பார்வதிக்கு அளித்த வாக்கை நிறைவேற்றவும், அவளைத் திருமணம் புரியத் திருவுளம் கொண்டார் பரமேச்வரன். இமவானிடம் பெண் கேட்டுச் செல்லும் போது, அவன் தம்மீது சந்தேகப்படாமல் இருக்கும் பொருட்டு, தன் சடைமுடி மீது அமர்ந்திருக்கும் கங்கையை மறைத்து வைப்பது நல்லது என்றும் தீர்மானித்தார். அதன்படி அவளை ஓர் அந்தண வடிவம் தாங்கி, பாஸ்கர முனிவர் தவமியற்றிக் கொண்டிருக்கும் வில்வவனம் சென்று, தான் தலயாத்திரை சென்றுவரப் போவதாகவும், அதுவரை தன் இல்லாளைப் பாதுகாத்து வரும்படியும் கோரி, அவரிடம் கங்கையை விட்டுச் சென்றார். பாஸ்கரரும் அந்த அந்தணச் சுமங்கலியைக் கண்ணும் கருத்துமாகக் காத்து வந்தார்.
ஒரு நாள் இவர் அரிசலாற்றுக்கு நீராடச் சென்ற போது, மறதியால் கடத்தைக் கொண்டு வராததை உணர்ந்து, அதை எடுத்து வரும்படி அப்பெண்மணியை ஆச்ரமத்துக்கு அனுப்பினார். அவ்வாறே அவள் ஆச்ரமத்துக்குச் சென்று கடத்தை எடுத்து வந்து முனிவரிடம் தந்து விட்டு, அவர் பார்க்காத சமயத்தில் ஆற்றில் இறங்கி, மாயமாக மறைந்து விட்டாள். அந்தண மாது மறைந்ததைக் கண்டு திடுக்கிட்டு, தானும் நீரில் மூழ்கித் தேடினார். ஆனால் அப்பெண்மணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரும் துயருற்றார்; செய்வதறியாது திகைத்தார்; செயலிழந்து போனார்; “அந்தணர் வந்து என் மனைவி எங்கே?” என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? பரமேச்வரா, இப்படியொரு சோதனையா?”
இதற்கிடையில் பார்வதி பரமேச்வரன் திருக் கல்யாணம் இமவானின் அரண்மனையில் கோலாகலமாக நடந்தேறியது. அதன் தொடர்பாகக் குமரக் கடவுள் தோன்றி, தாரகாசுரனை அழித்த பின்னர், பரமசிவன் பாஸ்கர முனிவருக்கு அருள் வழங்கவும், மாற்று வடிவிலிருக்கும் கங்கையை அழைத்துச் செல்லவும் மீண்டும் அந்தணர் வடிவமேற்று வில்வாரண்யம் வந்தார்.
அந்தணரைக் கண்டதும் பாஸ்கர முனிவர் அச்சத்தால் நடுநடுங்கிப் போனார். அவரது பாதுகாப்பில் விட்டுச் சென்ற மனைவியை அழைத்துச் செல்ல வந்திருப்பதாக அந்தணர் கூறியபோது, என்ன கூறுவது என்று புரியாமல், உடலெல்லாம் வியர்க்க, வாயடைத்து நின்றார். அந்தணர் சீற்றம் கொண்டார் . மனைவியை உடனே தம்மிடம் ஒப்படைக்காவிடில், அரசனிடம் கூறப் போவதாகவும், மரண தண்டனை பெற்றுத் தரப் போவதாகவும், தானும்
தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பலவாறாக அச்சுறுத்தினார். பாவம் பாஸ்கரர்! அப்பெண்மணி செய்து கொண்ட தற்கொலைக்குத் தான் பழியேற்க வேண்டியிருக்கும் நிலைமை ஏற்பட்டதைக் குறித்து மிக மிக வருந்தி, ஈச்வரனிடம் சரணடைந்து, இந்த ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார்.
இனிமேலும் அவரைச் சோதனைக்குள்ளாக்க விரும்பாத ஈச்வரன், சுய உருப்பெற்று, பார்வதி தேவியுடனும் கந்தப் பெருமானுடனும் பாஸ்கர முனிவருக்குக் காட்சி தந்தருளி ஆட்கொண்டார். ஆற்றில் மறைந்த பெண்மணி சடைமுடியில் வீற்றிருக்கும் கங்காதேவியே என்று உண்மையைக் கூறி முனிவரைச் சமாதானப்படுத்தினார். பின்னர் பாஸ்கரரின் வேண்டுகோளின்படி வில்வாரண்யத் தில் நிலையாய்த் தங்கி விடத் திருவுளம் கொண்டார். அன்று முதல் இத்திருத்தலம் ‘ருத்ரகங்கை’ என்ற பெயர் பெற்றது. இங்கு உறையும் சிவபெருமான் ஆபத்சகாயேச்வரர் என்றும், பரிமளேச்வரர் என்றும் திருநாமங்கள் பெற்றார். இறைவியின் பெயர் பரிமளநாயகி. நறுமண மலர்களையும் வாசம் மிகு திரவியங்களையும் கொண்டு சிவலிங்கத்தை பார்வதிதேவி பூஜை செய்த தால், இறைவனுக்குப் பரிமளேச்வரர் என்றும் இறைவிக் குப் பரிமளநாயகி என்றும் காரணப் பெயர்கள் ஏற்பட்டன.
இத்தலத்தில், காவிரியான அரிசலாறு மிகப் புனிதம் பெற்றுள்ளது. பிறரைப் புனிதப்படுத்தும் கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் இதில் கலந்து ஓடுகின்றன.
ருத்ரகங்கையில், மூன்று இரவுகள் தங்கி, அரிசலாற்றில் நீராடி, அம்மையப்பனை வழிபடுபவர்கள் சகல பாவங்களும் தொலைந்து உன்னத நிலையடைவார்கள் என்று தலபுராணம் கூறுகிறது.
இக்கோயிலில் ஸ்ரீசோமாஸ்கந்தர் கல் திருமேனியுடன் மூல மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சிரசில் கங்கை இருக்கிறாள்.
உள் மண்டபத்தில் பாஸ்கர முனிவரின் சிலை இருக்கிறது. விநாயகர் ‘ஜூர கணபதி’ என்று அழைக்லை இருகுறார். கும்பகோணம் ஸ்ரீநாகேச்வர சுவாமி கோயிலி லும் ஒரு ‘ஜுரஹர விநாயகர்’ இருப்பதை முன்னரே கண்டோம். காய்ச்சல் நோய் தீர, அவருக்குச் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள்.
சண்டிகேச்வரர் சந்நிதிக்கு எதிரில், துர்க்கை கோஷ்டத்தில், அமர்ந்த நிலையில் சிறிய காளியுருவம் ஒன்றுள்ளது. கபாலம், சூலம்,பாசாங்குசம் முதலியன இருக்கின்றன. மகிஷம் இல்லை.
பரிமளநாயகி அம்மன் சிலை, பெரியதாக, அழகாக இருக்கிறது. வேறு சில சிவலிங்கங்களும், பரிவார தேவதைகளும் இருக்கின்றன.
உள்ளடங்கி, அமைதியான சூழ்நிலையில் அருளொளி வழங்கிக் கொண்டிருக்கும் ருத்ரகங்கை கோவிலுக்கு அனைவரும் அவசியம் வரவும் !
For homam & puja contact
V. Raja Shivacharyar
Phone : 94881 16207