அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை கரும்பேஸ்வரர் ஆலயம் , கோவில்வெண்ணி
சிவமயம்
தலப் பெருமை – இருக்குமிடம் :
செந்தமிழும், பக்தி மணமும் கமழ்கின்ற தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் (தற்பொழுது) நீடாமங்கலம் அருகில் கோவில்வெண்ணி என்றழைக்கப்படுகின்ற “திருவெண்ணி” என்னும் தலம், தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் திருத்தலங்களுள் 102வது திருத்தலமாகும்.
பெயர் காரணம் :
இத்தலம் 4 யுகங்களும் கண்ட திருத்தலமாகும். கந்த புராண காலத்தில் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தேவசேனா திருமண அழைப்பிதழ் இந்நகரத்திற்கு அனுப்பப்பட்டதாக வரலாறு கூறுகின்ற பெருமையுடைய தலமாகும். முற்காலத்தில் இத்தலம் கரும்புக்காடுகளால் சூழப்பட்டிருந்ததாகக் கூறுவர். கரும்புக் காட்டினிடையே இறைவனின் திருமேனி கண்டுபிடிக்கப்பட்டு ஆலயத் திருப்பணி செய்யப்பட்டது. அதுசமயம் இரு முனிவர்கள் இத்தலத்தின் தல விருட்சம் கரும்பு என்றும், “வெண்ணி” என்றழைக்கப்படும் நந்தியாவர்த்தனம் என்றும் வாதிட்டுக்கொண்டிருந்தனர். அப்பொழுது இறைவன் தோன்றி எனது பெயரில் கரும்பும், தல விருட்சமாய் வெண்ணியும் இருக்கட்டும் என்று அருளியதால், இறைவன் திருநாமம் வடமொழியில் இரசபுரீஸ்வரர் என்று வழங்கலாயிற்று. இத்தல விருட்சம் நந்தியாவர்த்தனம் என்றழைக்கப்படும் நந்தியாவட்டையாகும். மேலும் இத்தல விருட்சத்தின் பெயரால் இவ்வூர் வெண்ணியூர் என்று தேவாரத் திருப்பதிகங்கள் வாயிலாக அறியப்படுகிறது. இதுவே மருவி தற்பொழுது கோவில்வெண்ணி என்றழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு :
கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் சூரியதீர்த்தம் – குட்டை போல் உள்ளது.நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில். ராஜ கோபுரம் மூன்று நிலைகளுடன் பழைமையாகக் காட்சியளிக்கின்றது. உள்ளே நந்தி, பலிபீடம் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர்.முருகள், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. நர்த்தன விநாயகர் ன் தனஷ்ட முச்வர், துர்க்கை ஆகியோர் உ ஏாடத்திண்டேசுவரர் சத்தி இலிங்கோ பவாமியையும் அம்பாளையும் ஓரிடத்திலிருந்து ஒருதேத தரிசிக்கும் அமைப்பு உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கியது. அம்பாள் தெற்கு நோக்கியது. கருவறை அகழி அமைப்புடையது. துவாரபாலகர்களைக் கடந்து, துவாரகணபதியை வணங்கி உட் சென்று மூலவரைத் தரிசிக்கலாம். மூலவர் – சுயம்பு -சதுர ஆவுடையார். அம்பாள் சந்நிதிக்குப் பக்கத்தில் நடராச சபை உள்ளது, தலப்பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலம் – அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். இருபுறமும் துவாரபாலகியர் உருவங்கள் சுதையில் உள்ளன. அம்பாளுக்குப் பிரார்த்தனையாக வளையல்களைக் கோர்க்கும் பழக்கம் இங்குள்ளது. இவ்வாறு வளையல்களைக் கோர்த்துள்ள ஒரு கழி சந்நிதிக்கு எதிர்த் தூணில் கட்டப்பட்டுள்ளதைக் காணலாம். நவராத்திரி, சஷ்டி, பங்குனி உத்திரம் முதலிய விழாக்கள் சிறப்புடையன.
தலபுராணம் :
இறைவன் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக் கட்டுகளாகக் கட்டப்பட்டிருப்பது போன்ற தோற்றத்துடன் காட்சி தருகிறார். இத்தல இறைவனை திருஞானசம்பந்தரும். திருநாவுக்கரசரும் திருப்பதிகங்கள் இசைந்து போற்றி பரவி மகிழ்ந்துள்ளனர். சுந்தரர் க்ஷேத்ரக்கோவையில் ‘வெண்ணிக் கரும்பே’ என்று போற்றிப் பாடியுள்ளார். இப்பதிகத்தில் பிணிதீர்க்கும் பெருமானாக சுந்தரர் இறைவனை போற்றியுள்ளார்.
கரும்பேஸ்வரர் கரும்புக் கட்டு வடிவில் இருந்து சர்க்கரை நோயையும் அகற்றுகிறார். சர்க்கரையையும், ரவையையும் சம அளவு கலந்து பிரகாரம் சுற்றி எறும்புக்கு உணவாக இட்டு வலம் வருகிறார்கள். இதுபோல் ஒரு மண்டலம் செய்யும் காலத்தில், சர்க்கரை நோய் படிப்படியாக குறைவதைக் கண்கூடாகக் காணலாம். திருவண்ணாமலை அகத்தியர் புத்தகத்தின் வாயிலாக அறியலாம்.
சேர, சோழ, பாண்டியர் போர் காலத்தில் சேர மன்னன் தங்கியிருந்த இடம் இன்று சேர்மாநல்லூர் என விளங்குகிறது. குதிரை கட்டிய இடம் இன்று லாயம் என விளங்குகிறது. நகர் முரசு ஒலித்த இடம் நகர் என விளங்குகிறது. இத்தலத்தை சுந்தரமூர்த்தி நாயனார் வெண்ணி அமர்ந்துறைகின்ற விகீர்தநாரே என்று 11 பதிகங்கள் பாடியுள்ளார். க்ஷேத்ரக்கோவையில் யுகம் கண்ட மூர்த்தி உலகிலேயே 12 சிவதலம்தான் இருந்தது என்கிறார். சூரசம்ஹாரம் முடிந்து முருகன் தேவசேனா திருமணத்திற்காக, இத்தலத்திற்கு முகூர்த்த ஓலை முதன் முதலில் அனுப்புங்கள் என்று பூதகணங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார் சிவபெருமான்.
திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் இத்தலத்து இறைவன். தன்னை வழிபடுவோர்கள் அல்லல்களையும், இன்னல்களையும் தீர்ப்பவர் என்பதனை.
மண்ணினை வானவரோடு மனிதர்க்கும்
கண்ணினைக் கண்ணனு நான்முக நுங்கானா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை அடையவல் லால்க்கில்லை அல்லலே.
என்று போற்றியுள்ளார். தேவர்கள் தொழும் வெண்ணியில் வீற்றிருக்கும் அண்ணலாகிய பெருமானைத் தொழுது வணங்குவோர்க்குத் துன்பம் ஏதுமில்லை. இம்மையில் நலமுடன் வாழ்வார்கள் என்பதை இப்பதிகத்தின் மூலம் அறியலாம்.
அப்பர் பெருமான் தமது பதிகத்தில்
இலையினாற் கொன்றை சூடிய ஈசனார்
மலையினால ரக்கன் றிறல் வாட்டினார்
சிலையினான் மதிலெய்தவன் வெண்ணியைத்
தலையினார் தொழுவார் வினை தாவுமே.
என்ற இப்பெருமானை தலையினார் தொழுபவர் வினைகள் யாவும் களையும் சிறப்பினை உடையவர் எனப் போற்றிப் பாடி பரவியுள்ளார்.
மேற்கண்ட சிறப்புகளையுடைய இத்தலம் முற்காலத்தில் வெண்ணி நகரம் என்றழைக்கப்பட்டுள்ளது.
சங்ககாலப் புலவர் ‘வெண்ணிக்குயத்தியார்’ இத்தலத்தைச் சார்ந்தவராக இருந்துள்ளார். இவ்வூரில் கரிகாற்சோழ மன்னர் தமது 18-வது வயதில் சேர, பாண்டியர் மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளார். வெண்ணிப் போர் நடந்தேறியது பற்றி, சரித்திர வரலாற்றின் மூலம் நாம் அறிய முடிகிறது. தாம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து கரிகாற் சோழன் இத்தல இவைனுக்குத் திருப்பணிகள் பல செய்ததையும் இத்தலத்தில் தென்கிழக்கு திசையில் வீற்றிருக்கும் கொற்றவையாகிய அம்மனை வணங்கியே போரில் வெற்றி பெற்றார் என்ற விபரங்களும் செவி வழிச் செய்தியாகத் தெரிய வருகின்றன. மேலும் சோழ மன்னர்கள் காலத்துச் சரித்திரக் கல்வெட்டுக்களும் இத்திருக்கோவிலில் உள்ளன.
இத்தலத்து இறைவி சௌந்தரநாயகி என்று வடமொழியிலும் அழகிய நாயகி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். பெயருக்குத் தகுந்தாற்போல் இறைவி மிக்க அழகுடன் அருள்பாலிக்கின்றார்.
திருவிழா :
நவராத்திரி விழா 9 நாட்களும் சிறப்புற நடைபெறுகின்றது. மேலும் சித்திராபௌர்ணமி, வைகாசி விசாகம் ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் மற்றும் பங்குனி உத்திரம் நாட்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.
பரிகாரம் :
இத்தலத்தில் சூரிய புஷ்கரனி தீர்த்தமும், சந்திர புஷ்கரனி தீர்த்தமும் உள்ளன. திருக்கோவிலின் முன்பாக உள்ள, சூரிய புஷ்கரனி தீர்த்தம் சர்வ ரோகங்களும், பாவங்களும் போக்க வல்ல தீர்த்தமாகும்.
மேலும் சில தகவல்கள் :
இத்தலத்தில் சிவாலயத்திற்கு தென்திசையில் கிராம தேவதையாக பூர்வாம்பிகை, புஷ்கலாம்பிகை சமேதராக ஸ்ரீதர்ம சாஸ்தா அருள்பாலிக்கிறார். தஞ்சாவூர் – நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து சுமார் 26 கி.மீ தூரத்திலுள்ள இத்தலத்து இறைவனை தரிசித்து அடியார்கள் பிணிகள் அகலப்பெற்று இம்மை மறுமைப் பயன்களை அடையலாம்.
கல்வெட்டில் இத்தலம் “சுத்தமலி வளநாட்டு வெண்ணிக் கூற்றத்து வெண்ணி” என்று குறிக்கப்பெறுகின்றது.இராசராசன் குலோத்துங்கன் (சோழர்) காலக் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. இவற்றுள் ஒருகல்வெட்டு 1196 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாதலின், இக்கோயில் 12 ஆம் நூற்றாண்டில் சிறப்பு வாய்ந்திருந்தது என்று அறிகின்றோம்.
”சடையானைச் சந்திரனோடு செங்கண் அரா
உடையாளை உடை தலையிற் பலி கொண்டூரும்
விடையாளை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையாளை அல்லது உள்காது எனதுள்ளமே.”
(சம்பந்தர்)
“முத்தினை பவளத்தை முளைத்த எம்
தொத்தினைச் சுடரை சுடர் போல் ஒளிப்
பித்தனைக் கொலு நஞ்சினை வானவர்
நித்தனை றெருநற் கண்ட வெண்ணியே.”
(அப்பர் )
வெண்ணி கரும்பேஸ்வரர் தலத்துக்கு வரும் வழியில் பிடாரி அம்பிகையை வழிபட்டு வரும்படி அமைந்துள்ளது. கரிகால சோழன், ‘வெற்றி காளி என்றும் வெக்காளி என்று உன்னை வழிபட்டு போரில் வென்றிடுவேன். அதன்பின் வென்றியூர் என்ற பெயர் பெறும் என்று’ சபதம் எடுத்து போரிட்டதாக வரலாறு கூறுகிறது.
பிடாரியம்மன் ஆலயத்தை கடந்து வரும்போது பிடாரி அம்மனையும் வழிபட்டு கரிகால சோழ மன்னன் வெற்றி கண்டதுபோல நாமும் அனைத்து வெற்றியும் அடைய வெண்ணி கரும்பேஸ்வரரை தரிசிக்க செல்வோம்.
Soundaranayagi sametha Karumbeshwarar, Kovilvenni
LOCATION
The temple is around 26 kms from Thanjavur via Salaiyamangalam, on the route to Needamangalam. it is 8 kms away from Needamangalam. Avalivanallur is 10 kms away, Haridwaramangalam is 13 km away, Mannargudi is 20 km away, Thiruvarur is 36 km away, Thanjavur is 26 km away, and Kumbakonam is 31 km away.
STHALAPURANAM
This place has seen four Yugas . Legend has it that Sri Subramania Swami Devasena’s wedding invitation was sent to this place as per skanda Puranam.
It is said that in earlier times, this place was surrounded by sugarcane forests, the Thirumeni of the Lord was found in the sugarcane forest, and the place readied.
Two sages, one named Sankaracharya and the other named Vishnuswami, were arguing about the temple’s tree. Sankaracharya believed that the tree was sugarcane, while Vishnuswami believed that it was nandivardhanam.The argument became so heated that the two sages decided to appeal to the god himself. The god appeared to them and said, “Let sugarcane be the tree , and place be called Venniyur.” The two sages were overjoyed and agreed to end their argument. The god’s name came to be known as Sri Karumbeswarar, and the temple came to be known as the Sri Karumbeswarar temple in Venniyur.
In a battle fought by the Early Chola dynasty Karikala Chola with a confederacy of Pandya and Chera kings, the battle resulted in absolute victory for Karikala. Following his defeat, the Chera dynasty king Uthiyan Cheralathan starved himself to death.
This is the birthplace of Sangam poet Vennikkuyathiyar,.
Karumbeswarar is said to cure diabetes presenting himself in the form of a sugarcane bunch.
Sundaramurthy Nayanar has sung 11 hymns in praise of the lord..